நெல்லிக்குப்பம் நகராட்சி பள்ளியில் கழிவறை குடிநீர் பிரச்சனை சரி செய்ய கோரிக்கை
Watch on:
▶️ YouTube
நெல்லிக்குப்பம் நகராட்சி திருகண்டீஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி கழிவறை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமா? நகராட்சி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருகண்டீஸ்வரம் நகராட்சி உயர்நிலை பள்ளியில் சுத்தமான குடிநீர், சுத்தமான கழிவறை இல்லாமல் மாணவ மாணவிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அண்மையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தும் இந்நிலை தொடர்வது வருத்தத்திற்குறியது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு இப்பள்ளியில் சுத்தமான குடிநீர், சுத்தமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.