சேலம் ராஜவாய்க்காலை தூர்வார பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்டம் பச்சப்பட்டி சங்கிலி ஆசாரிக்காடு பகுதியில் உள்ள ராஜ வாய்க்கால் ஓடையை தூர்வார வேண்டும், மேலும் அப்பகுதியில் சாலை, குடிநீர், பொது சுகாதாரம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டி, இன்று கோட்டை மைதானத்தில், தமிழ் தேச மக்கள் முன்னணி இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.