பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சேலம் மாவட்ட பிரிவின் சார்பில், இன்று கோட்டை மைதானத்தில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பசும்பால் லிட்டருக்கு 45 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 60 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.