🔥 TRENDING ગુજ્જુ લવ ગુરુ ના મ્રુત્યુ બાદ બેસણા મ... Bihar JD(U) internal rift erupts over... Bihar CM Tejashwi Yadav says state fun... Mapping errors in Bihar, Bengal SIR le... M.S. Gopate Hospital ने ग्रामीण को मुफ... ગોમતીદાસ બાપુની નેપાળ યાત્રા પૂર્ણ, જા...
20 Sep 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தாராபுரத்தில் சத்யபாமா பிரசாரத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 20 Sep 2026, 09:42 PM 👁 18
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தாராபுரத்தில் சத்யபாமா பிரசாரத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வெறுவேடம்பாளையம், நந்தம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அவரது பிரசார வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிஏபி வாய்க்கால் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் விவகாரத்தில் சத்யபாமா தலையிட்டு அதை நிறுத்தியதாக பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
“மீண்டும் ஓட்டு கேட்டு வரக்கூடாது” உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து தாராபுரம் மற்றும் குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
📲Get App