சேலம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்!
சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் தலைமையில், இன்று மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் அன்னதானப் பட்டியில் உள்ள காவல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவலர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும், மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவற்றுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும், பொதுமக்கள் காவலர்கள் மீது புகார் அளிப்பதை தவிர்த்து காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.