சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா இறுதி பூஜை!
சேலம் மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவின் இறுதி நாள் சிறப்பு பூஜை இன்று மதியம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அம்மனுக்கு சிறப்பு ஹோமர் திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர்.