Local
தென்காசி மாவட்ட தனி விரல் ரேகைப் பிரிவில் திருநெல்வேலி சரக டிஐஜி இரா. திருநாவுக்கரசு ஆய்வு
Watch on:
▶️ YouTube
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தனி விரல் ரேகைப் பிரிவில் திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனி விரல் ரேகைப் பிரிவில் (SDFPB Unit), திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., இன்று (15.09.2026) மதியம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தனி விரல் ரேகைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை டிஐஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு பணியில் இருந்த காவல் அலுவலர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் முக்கிய அறிவுரைகளை அவர் வழங்கினார். இந்த ஆய்வின்போது, இரண்டு விரல் ரேகை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, தனி விரல் ரேகைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அங்கு முறையாகப் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை டிஐஜி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அங்கு பணியில் இருந்த காவல் அலுவலர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் முக்கிய அறிவுரைகளை அவர் வழங்கினார். இந்த ஆய்வின்போது, இரண்டு விரல் ரேகை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.