🔥 ट्रेंडिंग उत्तर प्रदेश कैबिनेट ने 900 नई अदालतें... कर्नाटक में नकली ड्रग रैकेट में पाँच ग... AIIMS ने कार्डियोमेटाबोलिक रोगों पर स्... सिक्किम ने ड्र टी आओ जूनियर गर्ल्स नेश... केंद्रीय राज्यमंत्री रक्षी खडसे ने मिज... मिज़ोरम में पहचाना गया नया मेंढक, दशको...
16 सित. 2026
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

*காட்பாடியில் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

✍️ रिपोर्टर: A RAM PRABHU 🗓 06 सित. 2026, 06:06 PM 👁 28
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அருப்புமேடு பகுதி பொது மக்கள் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மிதந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர் யார்? அவர் ஏரி நீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📲Get App