சேலத்தில் பாரதிய மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சேலம் மாவட்டத்தில் ஏங்கி வரும் பாரதியார் மஸ்தூர் யூனியன் சங்கத்தின் சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கடைநிலை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அதிகரித்திட வேண்டும், புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும், தொழிலாளர் நடைமுறைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.